Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மஹிந்தவும், கோத்தபாயவுமே இந்த நாட்டை அமெரிக்காவுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர் - சிறிதுங்க ஜயசூரிய

மஹிந்தவும், கோத்தபாயவுமே இந்த நாட்டை அமெரிக்காவுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர் - சிறிதுங்க ஜயசூரிய

 

"நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மஹிந்த அரசு உடன் அமுல்படுத்தித் தமிழர்களின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இல்லையேல், இனிவரும் காலங்கள் மஹிந்த அரசுக்கு அக்கினிப் பரீட்சையாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை." இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய.

இலங்கைக்கு எதிரான அமெரிக்கா பிரேரணை நேற்று ஜெனிவாவில் வெற்றிகரமாக நிறைவேறியது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

"இலங்கை அரசு அதாவது மஹிந்த அரசு செய்வோம் எனக் கூறியதை செய்து முடியுங்கள் என்றே ஜெனிவாத் தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது.

அப்படியாயின், இதனைச் செய்து முடிப்பதற்கு மஹிந்த அரசு அடம்பிடிப்பது ஏன்? நீதியை வலியுறுத்தும் பிரேரணையை அரசு எதிர்த்ததன் மூலம் அதன் கபடத்தனம் இன்று முழு உலகத்திற்கும் அம்பலமாகியுள்ளது.

எதிர்க்கட்சிகள் நாட்டைக் காட்டிக்கொடுக்கின்றன என விமர்சிக்கும் அரச தரப்பினர், இந்த நாட்டை மஹிந்தவும், கோட்டாபயவுமே அமெரிக்காவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். யுத்தகாலத்தில் இருவரும் இணைந்து அமெரிக்காவுடன் பல உடன்படிக்கைகளைச் கைச்சாத்திட்டுள்ளனர். அதன் பிரதிபலன்களைத்தான் இன்று அரசு அணுஅணுவாக அனுபவிக்கின்றது.

அமெரிக்காவுக்கு எதிராக இந்த மஹிந்த அரசை விட இடதுசாரிகளுக்கு போராடத் தெரியும். ஆனால், முதுகெலும்பு இல்லாத மனிதாபிமானமற்ற இந்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அளவுக்கு நாம் இன்னும் தரம்தாழ்ந்து விடவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அரசு உடன் அமுல்படுத்தித் தமிழர்களின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இல்லையேல், இனிவரும் காலங்கள் மஹிந்த அரசுக்கு அக்கினிப் பரீட்சையாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை" என்று கூறினார் ஐக்கிய சோசலிசக்கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய.

3/23/2012 6:55:46 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்