Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வெலிக்கடை பெண் கைதிகள் மீதான துஷ்பிரயோகம்: சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் அறிக்கை!

வெலிக்கடை பெண் கைதிகள் மீதான துஷ்பிரயோகம்: சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் அறிக்கை!

 

வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் சிலர் சிறை அதிகாரிகளால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்ட மார்ச் மாதம் 8ஆம் திகதிக்கு முன்தினம் இரவு பெண் கைதிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மகளிர் தினத்தை முன்னிட்டு மேடையேற்றப்பட இருந்த நாடகம் ஒன்றின் ஒத்திகைக்காக எனக்கூறி பெண் சிறைக்கைதிகள் சிலரை ஏனைய பெண் கைதிகளிடமிருந்து வேறாக்கி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மை குறித்து அதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின்னரே தெளிவுபடுத்திக் கொள்ள முடியுமென சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பீ.டபிள்யூ.கொடிப்பிலி கூறியுள்ளார்.

சிறிலங்காவின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீதான அடிப்படை உரிமைகள் மீறப்படும் சம்பவம் இடம்பெற்று வருவதாக மனிதவுரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3/17/2012 6:33:48 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்