மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வாகனநத்தில் சென்ற இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸ் நிலையத்தில் அவரின் உறவினர்கள் நேற்று இரவு முறைப்பாடு செய்துள்ளனர்.
வாகரை திருமலை வீதி பால்சேனையைச் சேர்ந்த 22 வயதான தணிகாசலம் ஆனந்த கிசோத் என்ற இளைஞரே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டுள்ளதாக இம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு வேளையில் இவரின் வீட்டிற்குவ் சென்ற இனந்தெரியாத நபர்கள், கடத்தப்பட்ட இளைஞரின் தந்தை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாகவும், அவர் வீட்டில் இல்லாத நிலையில் இந்த இளைஞரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.