Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இந்திய இராணுவம் பற்றிய இரகசியக் கடிதம் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி? படைத்துறைத் தளபதியை நீக்கக் கோரிக்கை

இந்திய இராணுவம் பற்றிய இரகசியக் கடிதம் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி? படைத்துறைத் தளபதியை நீக்கக் கோரிக்கை

 

இந்திய இராணுவத்திடம் போதிய தளவாடங்கள் இல்லாமல் பலவீனமான நிலையில் இராணுவம் இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்திய படைத்துறைத் தளபதி வி.கே.சிங் எழுதியுள்ள கடிதம் ஊடகங்களுக்கு கசிந்ததையடுத்து இந்திய அரசியலில் பெரும் புயல் கிளம்பியிருக்கின்றது. இந்திய படைத்துறைத் தளபதியை பதவியிலிருந்து நீக்கக்கோரி இந்திய பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் இன்று காலை கோஷம் எழுப்பப்பட்டது.

தொடர்ச்சியாக சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் ஒருவராகவே இந்தியப் படைத்துறைத் தளபதி இருந்து வருகின்றார். வயது சர்ச்சை, 14 கோடி பேரம், தற்போது பிரதருக்கு அனுப்பிய கடிதம் என பல்வேறு சர்ச்சைகள் கிளப்பி வருவதால் மத்திய அரசு பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. படைத்துறைத் தளபதியை பதவியிலிருந்து நீக்குமாறு இந்திய அரசுக்கு அழுத்தங்களும் அதிகரித்திருப்பதால் இந்திய அரசியலில் இந்தப் பிரச்சினை சூடுகிளப்பத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என இந்தியப் பாராளுமன்றத்தில் பா.ஜ.க தரப்பில் வெங்கையா நாயுடு கோரினார். இதற்கு பதில் அளித்த பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.,அந்தோணி கூறுகையில் இது தொடர்பான விபரம் எனக்கு தெரியும். இராணுவ பாதுகாப்பு தொடர்பான விஷயத்தை வெளிப்படையாக பேச முடியாது. இருப்பினும் விரைவில் விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

3/28/2012 3:34:53 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்