'வாழும் தமிழ்' எனும் தலைப்பில் தமிழ் புத்தகக் கண்காட்சியும், 'தமிழ் நடை மீட்சி' எனும் கருப்பொருளில் இலக்கியக் கருத்தரங்கும் காலம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் கனடாவில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 06 மணிவரை இடம்பெறவுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்னர்.
இப்புத்தகக் கண்காட்சியில் புதிய புத்தகங்கள், புதிய சஞ்சிகைகள் மற்றும் தமிழகம், ஈழம், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து வெளியான புதிய வெளியீடுகளும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
அதேவேளை, மாலை 04 மணிக்கு ஆரம்பமாகும் இலக்கியக் கருத்தங்கில் கலாநிதி பசுபதி, மணி வேலுப்பிள்ளை மற்றும் அ.கந்தசாமி ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
இதன்போது என்.கே.மகாலிங்கத்தின் 'ஆடும் குதிரைகள்' (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) மற்றும் 'விலங்குகளின் வாழ்க்கை;' (மொழிபெயர்ப்பு நாவல்) ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு, Scarborough Civic Centre, 150 – Boroigh Drive, (North-west corner of McCowan Road and Ellesmere Road)எனும் முகவரியில் இடம்பெறவுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.