அம்மா, நான் கனவுகளைத் தின்று வயிறு பெருத்தவளா?
காலம் இடறிய பெருவெளியில் வீழ்ந்த குழந்தையா?
நெருப்பையே அள்ளித் தின்னும் வாழ்வை ஏற்றவளா?
தம் காற்றையும் காதற் பெருக்கையும்
தாய் நிலத்துக்காய் தந்தவரை
விதைத்த குழியைப் புதைத்த நாட்டின் புதல்வியா?
என் சோதரர் கல்லறைகளை
...
பாடல் கோடியுண்டு உமக்கு
காற்றைக் கேளுமது சொல்லும்!
ஆடல் நிதமுமுண்டு உமக்கு
ஒளியசைவிற் காணும் அதனையெலாம்!
உமை எண்ணும் நினைவு நிதமுமுண்டு
பாரும், மலர்களனைத்தும் நீரே!
ஆகையினால்,
வீழ்த்தவும் முடியா வெல்லவும் முடியா
நீள்பரப்பின் நினைவுப் பெருக்கு நீர்.
அவருடைய வாழ்க்கை, அவருடைய தோழமை, அவருடைய கவிதைகள், அவை எழுந்த சூழல், அவற்றின் கருப்பொருள்
1
சு.வி என்று அழைக்கப்படும் கவிஞர் சு.வில்வரத்தினம் ஈழக்கவிஞர்களில் முக்கியமானவர். அகங்களும் முகங்களும், காலத்துயர், காற்றுவழிக்கிராமம், நெற்றிமண், உயிர்த்தெழும் காலத்திற்காக, விடுதலை முகம் என ஆறு கவிதைத்தொகுத ...
காயங்கள் நிரம்பிய ஈழத்தமிழரின் வாழ்வைப் பாடும் கவிதைகளை உள்ளடக்கி, 'சரம கவிகள்' என்ற புதியதொரு கவிதைத் தொகுதி அண்மையில் வெளியாகியுள்ளது. பா.அகிலன் யாத்த இந்தக் கவிதைகள் 20-11-11 யாழ்ப்பாணத்திலே வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பா.அகிலனின் இன்னொரு கவிதை நூல் வந்திருந்தது, 'பதுங்கு குழி நாட்கள்' என்ற தலைப்பில் ...
சிவப்பாய் சிதறிக் கிடக்கின்றன
சுவர்களில்
இவனின் கனவுச் சிதறல்கள்
உயிரோடு எரிந்தழிந்த
வீரமாய்
விடைபெற்றுச் சென்றது
வீரனின் வரலாறு
இருந்தாலும் யுகங்கள் கழிந்தாலும்
உலகச்சக்கரம் தர்மத்தின் வழியில்
சுற்றாது விடினும்
தவம் கிடந்த கல்லறைகளில்
தர்மம் ஒ ...
பிள்ளைக் கறி தந்தேன் தாயே
பெருக்கெடுத்தோடும் குருதியில் குழம்பிட்டேன்
முல்லைப் பூவிரிந்த முற்றத்தை விட்டுப் பெயர்ந்தேன்.
சொல்லியாறமுடியாத் துயரெல்லாம் பட்டேன்
உனக்காகப் பசியிருந்தேன்
தூக்கமற்ற இரவுகளைக் கடந்தேன்
பாடுகள் கோடி சுமந்தேன்
காடுகள் பலவும் அலைந்தேன்
ஆனால் அம ...
முரண் - 10/17/2011 12:34:45 PM
நான் ஒன்றைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
அவர்கள் வேறொன்றைப் பற்றிப் பேசுகிறார்கள்
நாங்கள் ஒன்றைக் கேட்கிறோம்
அவர்கள் வேறொன்றைத் தருவதாகச் சொல்கிறார்கள்
எனக்குத் தெரியவில்லை
நாங்கள் எப்போது, எப்படி ஒன்றைப்பற்றிப் பேசமுடியும் என்று...
பிரச்சினைகளின் ஆழ்கிடங்கில் என ...
கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதன். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்து கொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது.....? கண்தொடும் தூரத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள ...
திசையற்ற பயணங்களின் காதலை
எனக்குள் வளர்த்துச் செல்வதற்காக
பலமுறை
எனக்குமுன் நீ வேசம் கட்டினாய்
உன்னை பின் தொடர்ந்து வந்த நான்
தீராத மோக நதிகளில் மூழ்கினேன்
மாய வசிகரங்கள் நிறைந்த மலர் காடுகளின்
இதயங்களுள் முகாமிட்டேன்
கிளரும் வாசனைகளாலும் நிறங்களாலும் ஈ ...
நான் கவித்திருந்த போதுகளில்
பாரதி நிற்பதுவும் பறப்பதுவுமாயிருந்தான்.
சுகித்திருந்த போது
பலர் சோகித்திருந்தார்கள்.
சோகித்திருக்கையில்...
எனக்குக் கண்ணீருக்குப் பதிலாகப் புன்சிரிப்பு வந்தது.
எப்பொழுதுமே நான் எதிர்மாறாய்த்தான் இருக்கிறேனாக்கும்.
இப்பொழுது நான்
...
நெருப்பை அணைக்கிறீரா?
நெருப்பை வளர்க்கிறீரா?
நெருப்பு ஒருபொறியாய் நிலத்தில் புகையுதுதான்.
அதைமுற்றாய் நீவிர்
அணைக்கவும் விரும்பவில்லை!
அதைமுற்றாய் நீங்கள்
வளர்க்கவும் நினைக்கவில்லை!
உங்கள் நலத்திற்கு ஏற்ப
ஒருவிதமாய்
இங்கே தணலைக் கையாள விரும்புகிறீர்.
ந ...
நிழல் சொரியும் மரங்களின்
கீழ் இருந்த சனங்களின்
உரையாடல்களின்
சுவாசம்
நின்றுபோகிற தருணங்களில்
துடிதுடித்துச் சாகும்
வாழ்க்கைக் கவிதையை...
தனது தூரிகையால்
மீட்டுகிறாள்
முப் பரிமாணங்களில்
அவள் எழுப்பும்
கனவுக் கோடுகள்
பெரும் ...
1. வழிமாறிய ஆடுகளில் ஒன்று இதோ உங்கள் முன் வருகின்றது. தனது கூட்டத்தை விட்டுப்பிரிந்த அந்த ஆட்டை நீங்கள் நிராகரிப்பீர்கள். எனதரும் குழந்தைகளே.. நிச்சயமாக.. அதி நிச்சயமாக சொல்வேன். வானமும் பூமியும் சாட்சியாக சொல்வேன்.. ஆண்டவர்.. எங்கள் ஆண்டவர் அப்படிச் செய்யமாட்டார். 'வா குழந்தாய்' என தன் மார்போடு அணைத்துக் கொள்வார். ஏனெனில் ஆண்டவர ...
வேண்டு மெமக்கும்
விடுதலை யென்று
தீண்டும் வெயிலில்
பட்டினி கிடந்துபின்
ஆகாது அதுவென்று
அறியும் ஒருநாளில்
தீட்டினோம் கூராயுதம்
ஆயினும் பெரிதாய்
ஆக்கிய தொன்றில்லை
பேயினுக் கெதிராய்ப்
போர்க்கொடி தூக் ...
ஐ.நா அறிக்கையினை எழுத வேண்டும் என ஏற்பாடு செய்த ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் பான் கீ மூன், நிபுணர் குழு அறிக்கையின் மீது தன்னால் எந்த நடவடிக்கயையும் எடுக்க முடியாது என அறிவிக்கிறார். முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து முடிந்தபோது வேடிக்கை பார்த்திருந்த உலக நாடுகள் இப்போதும் செயலாற்றுவதில் இருந்து பின்வா ...
<< Prev
Next >>