'காணி நிலம் வேண்டும் பராசக்தி, காணி நிலம் வேண்டும்' என்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கவிதை பாடினார் பாரதியார். பிறகு, இந்தக் கவிதையைப் பாடலாக்கிச் சினிமாவில் பயன்படுத்தினார்கள். சினிமாவில் வந்த பிறகு, இந்தப் பாடல் பிரபலமாகி இப்போது எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். வேண்டப்படும் போதெல்லாம் இதைப் பாடியும் சந்தர்ப்பங்களில் ...
தமிழர் திருநாளாம் இப்பொங்கல் நாளில் பொங்குதமிழ் மூன்றாவது ஆண்டில் காலடி வைக்கிறது.
2009 மே 18 இற்குப் பின்னான அரசியற் சூழலில், ஈழஅரசியல் குறித்த நம்பிக்கைகள் சிதைந்து எமது இனத்தின் ஆன்மா காயம்பட்டுநின்ற ஒரு பொழுதில்தான் - எதிர்காலத்தின் மீது ஒரு புதிய நம்பிக்கையை விதைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவராய் பொங்குதமிழுக்கு முதல் ...
2012 ம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் காலடி எடுத்துவைக்க உலகம் தயாராகிக் கொண்டிருக்கின்ற வேளையில், ஈழத்தில் வாழும் தமிழர்களின் புத்தாண்டு பலகேள்விகளுடன் ஆரம்பிக்கப் போகின்றது. குறைந்தபட்ச அதிகாரங்கள்கூட மறுக்கப்பட்டதால் தோல்வியடைந்த பேச்சுவார்த்தை, சிங்களப் பேரினவாதத்திடமிருந்து தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதை மீண்டும் தெளிவாகப் பறை ...
இந்த அத்தியாயம் தமிழர்களின் மிகைத்தன்மைகளைப் பற்றி, தமிழ் அரசியலின் மிகைத்தன்மையைப் பற்றிச் சிறிது பார்க்க முயற்சிக்கிறது. உண்மையில் இதை மிகவிரிவாக, வரலாற்றுப் பார்வையோடு அணுகவேண்டும். எனினும் வாசிப்புக்கான அவசியத்தையும் தற்போதைய நிலைமையையும் கருத்திற் கொண்டு இதைச் சுருக்கமாகப் பார்க்க வேண்டியுள்ளது.
00
இதுகாலவரையா ...
01
மூன்று நாட்களுக்கு முதல், மழை பெய்து கொண்டிருந்த ஒரு பின்னேரத்தில் எதிர்பாராத விதமாக அந்தப் பெண்ணைச் சந்தித்தேன். அவளுக்கு முப்பது வயதிருக்கலாம். மழைக்காகத் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் அவள் ஒரு கடைத்தொகுதியை ஒட்டிய பகுதியில் ஒதுங்கி நின்றாள். நின்றவள் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். கடுமையா ...
நான் எங்களின் அம்மம்மாவை ஆச்சியென்றே சொன்னேன். கவிஞர் புதுவை இரத்தினதுரை தன்னுடைய அம்மாவையே ஆச்சியென்றார். இதைக் கேட்ட ஆரம்பத்தில் எனக்குக் குழப்பம். பிறகு விசாரித்தபோது தாயையே ஆச்சி என்று எங்கள் முன்னோர் சொல்லியிருக்கினம். தந்தையை அப்பு என்றும். ஆனால், நாங்கள் அம்மம்மாவை ஆச்சி என்றும் அப்பாவை ஐயா என்றும் அம்மாவை அம்மா என்றும் சொன ...
அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிகழ்ந்த படுகொலை. இந்தியப்படையின் துப்பாக்கிச் சூட்டில், வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உ ...
இறுதிப் போரின்போது அல்லது போர் முடியும் தறுவாயில் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல போராளிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாத ஒரு நிலை இன்னும் தொடர்கிறது. சரணடைந்தவர்கள் அனைவரைப் பற்றிய விவரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மேல் தமக்கு எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் தெரியாது என்கின்றது இலங்கை அரசும் அதன் பாதுகாப்பு அ ...
சிங்கள அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறை காலத்துக்குக் காலம் புதிய வடிவங்களையும் புதிய உபாயங்களையும் எடுக்கின்றது. ஆகவே, அதை எதிர்கொள்ள வேண்டிய ஒரு நெருக்கடியில் எப்போதும் தமிழ்த்தரப்பு சிக்குண்டேயிருக்கிறது.
இவ்வாறு செயற்படும் தருணங்களில் எல்லாம் - குறிப்பாக தேர்தற் தருணங்கள் அல்லது நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எல்லாம் (தே ...
1
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் அல்லது ஈழப்போராட்டத்தின் இறுதி யுத்தம், அதன் விளைவுகள், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி, புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான மக்களின் வாழ்க்கை, யுத்தத்தின் பின்னரான நிலைமைகள், மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்ற பிரச்சினைகள், தற்போதுள்ள அரசியல் நிலைவரங்கள், இன்றைய அரசியற் செயற்பாட்டாளர்கள் ...
அண்மையில் வன்னிப் பகுதிக்கு விஜயம் செய்திருந்த சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் 'வன்னிப் பகுதி மக்களின் வாழ்க்கையும் ஈழத்தமிழர்களின் அரசியல் நிலவரமும் இப்பொழுது எப்படியிருக்கிறது?' என்று கேட்டார். யுத்தத்தின் பிறகுள்ள நிலைமைகளை அவதானிப்பதற்காக அவர் இந்தப் பயணத்தைச் செய்திருந்தார்.
இந்தக் கேள்வி சில அடிப்படையான விசயங்கள் குறித்து ...
அன்புள்ள குமாருக்கு, வணக்கம்
நான் முன்னரே சொன்னதைப் போல தொலைபேசியில் பேச முடியாத விசயங்களை இங்கே எழுதுகிறேன். ஆனால், அதையும் விட முக்கியமான சங்கதி என்னெண்டால், தமிழ்நாட்டில ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனைக்கு எதிராகப் பலரும் போராட ...
2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னியில் நடத்திய மிகப் பிரபல்யமான ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக இந்திய ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பின்வருமாறு பதிலளித்தார்.
அதாவது அது 'ஒரு பெரும் துன்பியல்' (A ...
'தமிழகத்தை கையாளாமல் இந்திய அரசைக் கையாள முடியாதென' இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலி 1983-ம் ஆண்டு பிற்பகுதியில் கூறினார். இக்கூற்றை லலித் கூறுவதற்கு காரணமாக இருந்தவர் லண்டனில் இராணுவ விஞ்ஞானத்தை ஒரு பாடமாகப் பயின்றவரும், ஜே.வி.பி.இன் ஒரு முன்னாள் உறுப்பினருமாவார்.
பொதுவாக சிங்களத் தலைவர்கள் ...
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவான வெற்றியைப் பெற்றுள்ளது. வடக்கில் 17 சபைகளையும், கிழக்கில் மூன்று சபைகளையும் அது கைப்பற்றியது. தீவுப் பகுதிலுள்ள மூன்று சபைகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தக்கவைத்துக் கொண்டுள்ளது. தமிழ்த் தேசி ...
<< Prev
Next >>