சர்வதேச சமூகமும், மனித உரிமைபேசும் அமைப்புகளும் மௌனித்துப் பார்த்திருக்க, சிங்களப்பேரினவாத அரசு நடாத்திய முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வடுக்களுடன் மூன்று ஆண்டுகளைக் கடந்து நிற்கின்றோம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை முன்னிறுத்திய நகர்வுகள், சர்வதேச தளத்தில் பிறிதொரு பரிமாணத்தில் ஈழப்போராட்டத்தைக் கொண்டு சென்று விட்டுள்ளன. சி ...
இலங்கை தொடர்பாக அமெரிக்கா மீண்டும் அழுத்தங்களைத் கொடுக்கத் தொடங்கிவிட்டது. இந்தத் தடவை அழுத்தங்கள் ஒரு வழிப்பட்டதாக இருக்கவில்லை. அரசாங்கம் திணறக் கூடிய வகையில் பல வழிப்பட்டதாகவே இருந்தன. வெளிநாட்டமைச்சர் பீரிசை அமெரிக்காவிற்கு அழைத்தல், இந்தியாவுடன் இணைந்து கூட்டழுத்தத்தைக் கொடுத்தல், பொருளாதார ரீதியாக நெருக்கடிகளைக் கொடுத்தல், உ ...
இம்மாதப் பௌர்ணமி ஒரு வகையில் இலங்கையில் உள்ளவர்கள் எல்லோருக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கௌதம புத்தர் ஞானம் பெற்றதை பக்திபூர்வமாகக் கொண்டாடும் இந்நாட்டினர் எந்தளவுக்கு அவர் போதித்த பன்மைத்துவம் பற்றி அறிந்து வைத்திருக்கின்றார்கள் அல்லது நடைமுறையில் கடைப்பிடிக்கின்றார்கள் என்பது கவலைக்குரியதும் பலரையும் பாதிக்கின்றதுமான ஒரு வ ...
மிகப் பெரும் ஆரவாரத்துடன் இலங்கைக்குப் பயணம் செய்த இந்தியப் பாராளுமன்றக்குழு நாட்டிற்குத் திரும்பிவிட்டது. கடந்த முறை வந்த தமிழக பாராளுமன்றக்குழுவின் அனுபவம் காரணமாக தமிழ்மக்கள் இந்தத்தடவை பெரிய எதிர்பார்ப்புகள் எதனையும் வைத்திருக்கவில்லை. தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க வும், அ.தி.மு.க வும் தமது உறுப்பினர்களை வாபஸ் பெற்றதுடன ...
முன்னாள் ஜனாதிபதி திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்கள் கடந்த வாரம் இந்தியாவில் வெளியிட்ட கருத்து ஒன்றில் சிங்கள மக்கள் அதிகாரப் பகிர்வுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அவர்களுக்கு பிரச்சனையின் தாற்பரியம் சரியான முறையில் அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். நாட்டில் எத்தகைய பிர ...
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மேதினத்தில் கூட்டமைப்பு கலந்து கொள்வது என்பது உறுதியாகி விட்டது. அண்மையில் கொழும்பு சிறீ கொத்தாவில் ரணில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சம்பந்தன் கூட்டமைப்பின் சம்மதத்தை தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரியவில்லை. சம்பந்தன் சம்மதத்தினை ...
சமீப நாட்களாக இலங்கையின் அரசியல் சூழலில் ஒரு வகையான திகில் அனுபவத்தை வழங்கிக் கொண்டிருந்த ஜெனிவா அரசியல் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. தெற்கின் சிங்கள தேசிவாத தரப்பினரை கவலைக்குள்ளும், தமிழ்த் தேசியவாத சக்திகளை மகிழ்சிக்குள்ளும் தள்ளும் வகையில் ஜெனிவாவின் முடிவு அமைந்திருந்தது. 47 நாடுகளை உறுப்பினராக கொண்டிருக்கும் ஜ.நாவின் மனி ...
ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேறிய நிலையில் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய அல்லது அவ்வாறான பிரேரணை ஒன்று நிறைவேற வேண்டும் என்று விரும்பிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது என்ன செய்துகொண்டிருக்கின்றது? பிரேரணையில் கூறப்பட்டுள்ள விடயங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ ...
கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ ஜனநாயகம் என்பதை கும்பலின் ஆட்சி என்று வர்ணித்தான். தனது குருவான சோக்கிரட்டீஸ் தண்டிக்கப்பட்ட முறையினைப் பார்த்து ஏற்பட்ட கோபத்தினால் பிளேட்டோ இப்படி ஜனநாயகத்தை வெறுத்ததாகக் கூறப்படுகின்றது. குடியரசில் ஆட்சியாளன் தத்துவஞானியாகவும் இருக்க வேண்டும் என்று பிளேட்டோ விரும்பினான். இத்தகைய சிந்தனையை ஒட்டிய கருத ...
என்றுமில்லாத அளவுக்கு இன்று 'ஜெனீவா' பற்றிய பேச்சு இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்கள் மத்தியிலும் களைகட்டியுள்ளது. வெறுமனே தூரத்து நடப்புகளாகப் பார்க்கப்பட்டவை இன்று ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கும் கொடும்பாவி எரிப்புக்கும் உட்பட்ட விடயமாக மாறிவிட்டமை ஆச்சரியமே. இலங்கை தொடர்பான தீர்மானமொன்று ஜெனீவாவிலுள்ள ஐ. நா. மனி ...
மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அமெரிக்க தீர்மானம் எத்தகைய ஒன்றாக இருக்கலாம், அது இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் மீது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்றவாறான விவாதங்களில் அனைவரும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போது, அவ்வாறான விவாதங்கள் அனைத்தையும் ஓரம்கட்டும் வகையில் த.தே.கூட்டமைப்பின் உள் முரண்பாடுகள் அம்பலமா ...
மனித உரிமைகள் பேரவையானது, மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அதற்கான நடவடிக்கைளை எடுப்பதற்கான ஒரு விசைப்பலகையாக (springboard) இருக்கிறது. அத்துடன் ஒவ்வொருவரும் அதனை அவ்வாறுதான் பார்க்கவும் வேண்டும். (All victims of human rights abuses should be able to look to the Human Rights Council as a fo ...
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரேரணையை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வருவதற்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தீர்மானித்துவிட்டது. றொபேட் ஓ.பிளேக்கும் மரியா ஒட்டேரோவும் அதனை ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தெரிவித்துவிட்டனர்.
இதற்குப் பின்னர் போர்க்குற்ற விசாரணை பின்னுக்குத் தள்ளப்பட் ...
நல்லிணக்க ஆணைக்குழு விவகாரம் அரசிற்கு பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய கதையாகிவிட்டது. அதன் சிபார்சுகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் அரசிற்கு வரத்தொடங்கி விட்டது. ஏற்கனவே போர்க்குற்ற விசாரணை விடயம் நிலுவையாக உள்ள நிலையில் இது புதிய தலையிடிதான்.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை போர்க்குற்ற விவகாரத்தை சிறிதளவுகூட சாதகம ...
அரசுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் விழுந்தடித்துக்கொண்டு இந்தியாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசினை பாதுகாக்க முற்படுவது வழமையே. இந்தத்தடவையும் அது நடைபெற்றிருக்கின்றது. இந்திய வெளிநாட்டு அமைச்சர் கிருஷ்ணாவின் இலங்கை விஜயமும் தொடர்ந்து இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இலங்கை விஜயமும் இதற்காககத்தான் இடம்பெற்றிருக்கின்ற ...
<< Prev
Next >>